Thursday, December 9, 2010

போகும்போது!!!!

நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...

Friday, December 3, 2010

காதல் வார்த்தைகள்....!!

நினைத்துப் பார்த்தேன்
கண்ணீராய்ச் சிதறின....!!
அவளுடன் பேச நினைத்த
அந்தக் காதல் வார்த்தைகள்....!!

வலியால் துடிக்கிறது

கையளவுதான் இதயம் அதிலும் ஆயிரம் காயங்கள்
அதனால்தான் என்னவோ வலியால் துடிக்கிறது......!!

மறக்க சொல்கிறாய் எதை மறப்பது???

மறக்க சொல்கிறாய் எதை மறப்பது
உன்னுள் தொலைந்த என்னையா...
இல்லை என்னுள் தொலையாமல் இருக்கும்
உன் நினைவுகளையா....

Thursday, December 2, 2010

காயம்

மருந்திட்டுக் கொள்ள மனம் இல்லை
மருந்திட்டும் மாற்றமில்லை
என் மனதில்
காயம்
என் காயங்களிலும் கசிகிறது
என் காதல் !

ஒரு தலை காதல்

அவள்...
காதலை தான் தரவில்லை
கவிதையை தந்தாளே
என்று நினைத்த போது
விழிகளின் ஓரத்தில்
கண்ணீர் வடிந்தது!

காதல்

காதல் என்றால் சுகம் என்றான் ஒருவன்

காதல் என்றால் வலி என்றான் ஒருவன்

காதல் என்றால் மனம் கணக்கும் என்றான் ஒருவன்

காதல் என்றால் அழகு என்றான் ஒருவன்

காதல் என்றால் கவிதை என்றான் ஒருவன்

காதல் என்றால் இனிக்கும்விஷம் என்று கூட

சொன்னான் ஒருவன்

காதலை பார்க்கும் பார்வையில் உள்ளது

அர்த்தம்

என்னை பொறுத்தவரை

காதல் ..................................... ?


என்ன புரியலையா அது விடை இல்லா கேள்வி குறி

பிடித்தது எதுவென்று நான் சொல்ல...

பிடிக்காதது ஏதேனும்

உன்னிடம் இருந்தால்தானே

உன்னிடம் பிடித்தது

எதுவென்று நான் சொல்ல முடியும்....

Friday, November 26, 2010

தவிக்கிறேன்....

படுக்கும்போதும்

உறங்கமறுத்து

உன்னையே நினைக்கிறேன்!-அந்த

காதலே இல்லையென

மறுத்தபோதும்

உன்னை மறக்காமல்

நான்

தவிக்கிறேன்!

உன் பார்வை பட்ட நாள்முதல்.....

உடலளவில் பாதிப்புகள் இல்லை..

மனதளவில் தான்..

என் மேல்

உன் பார்வை பட்ட நாள்முதல்.....

உண்மையான நட்பு!

விட்டு கொடுப்பது மட்டும்
நட்பல்ல!
கடைசிவரை விடாமல்
இருப்பதுதான்-உண்மையான நட்பு!

நட்பு

ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாத நட்பும்.... உரிமையை எடுத்து கொள்ளாத நட்பும் உண்மையான நட்பாக இருக்க முடியாது....!

காதல்

கவிதைகளில்
மட்டுமே
எனக்கு
காதல்
வசப்படுகிறது.....!

இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்...

"நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப்பாய்
என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
கேட்ப்பாய் என்று தெரியாது, ஏதோ
கோபத்தில் என்னை மறந்துவிடு என்று
சொன்னால், இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!! "

Sunday, November 21, 2010

இப்போதெல்லாம்.....

நான்
கவிதை எழுதும்
பொழுதெல்லாம்
உன்னை
நினைப்பதில்லை....

உன்னை
நினைக்கும்
பொழுது மட்டுமே
கவிதை எழுதுகிறேன்.....

இப்போதெல்லாம்
கவிதை மட்டுமே
எழுதிக் கொண்டிருக்கிறேன்.....

என் காதல்....!

நான் உன்னை
ஆயிரம் முறை
பார்த்திருந்தாலும்
நீ என்னைப் பார்த்த
அந்த நொடியில் தான்
விதையாய் விழுந்தது
என் காதல்....!

நான் உன் பெயரை
கோடி முறை
ஜெபித்திருந்தாலும்
நீ என் பேர் சொன்ன
அந்த நொடியில் தான்
முதல் பூ பூத்தது
என் காதல்....!

நான் உன்னிடம்
கனவிலும் நினைவிலும்
பேசியிருந்தாலும்
நீ என்னிடம் பேசிய
அந்த நொடியில் தான்
கனிந்து கசிந்தது
என் காதல்.....!

நான் உன்னையே
உயிராய், வாழ்வாய்
எண்ணியிருந்தாலும்
நீ உன்னவளை காட்டிய
அந்த நொடியில் தான்
'நம் காதல்' ஆகாமலே
சருகாகிப் போனது
என் காதல்.....!

என் மனம் தற்கொலை செய்துகொண்டது.

அளவில்லா ப்ரியங்களுடன்
பேச முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.

இதயத்தில் ....

அனுமதியில்லாமல்

வந்திருந்தாலும்

அனுப்பிவைக்க விருப்பமில்லை...

இதயத்தில் அவள்...

காதல்

கா - காலமெல்லாம்

த - தவித்திருப்பான்

ல் - இல்லாத ஒன்றிற்காக..!

உன் நினைவுகள் வாழ்வதால்....

தனியாக இருந்தபோதும்

தனிமையென நினைத்ததில்லை....

இதயத்தில் எப்போதும்

உன் நினைவுகள் வாழ்வதால்....

இதயத்தினுள் வலியோ ஆயிரமாயிரம்..

நான் இதுவரை

எழுதிய கவிதைகள்

ஆயிரமாக இருக்கலாம்..

என் இதயத்தினுள் இன்னமும்

உன் நினைவுகள்

கொடுக்கும் வலியோ ஆயிரமாயிரம்..

Wednesday, November 17, 2010

என் இதயத்தில்

தூண்டிலில்

சிக்கிய மீனாய்

சிக்கி தவிக்கிறேன்....

என் இதயத்தில்

அவள் பார்வை பட்ட நாள்முதல்.....

ஒரே ஒரு பார்வையில்...

மாயம் செய்யவில்லை...

மயங்கிவிட்டேன்....

அவள் பார்த்த

ஒரேஒரு பார்வையில்...

ஒரு தலை காதல்

கண்கள் உன்னை
கண்டதும்
கவலைகள் பறந்தன
கண்ணீர் மறைந்தன
புன்னகை பூத்தது
முழு நிலவுடன்-என்
வாழ்க்கை பயணம்
தொடந்தது- ஒரு
தலை காதலுடன்....

கனவு

நீ ஏன் கை கோர்க்க
நான் உன் விரல் பிடித்து
நடந்தேன் கடற்கரை மணலில் !
அலை வந்து அழித்தது
நம் பாத சுவடுகளை
விழித்து எழுந்தேன் !
ஏன் கனவும் கலைந்தது !
என்றும் ஏன் கனவில் நீ
நிஜத்தில் ????????????

பிரிவு

பிரிவு எனக்கு நெருங்கிய நண்பன்... பழகியவர் எல்லாம் என்னை விட்டு பிரிந்து செல்கின்றனர் ஆனால் பிரிவு மட்டும் என்னைவிட்டு பிரிந்து செல்வதில்லை...!

ஒரு தலை காதல்

என்னை வெறுத்த அவளையே மறக்க முடியாத போது நான் விரும்பிய அவளை என்னால் எப்படி மறக்க முடியும்?

கனவுகளுக்கு எச்சரிக்கை...

கனவுகளுக்கு எச்சரிக்கை...

கனவில் வந்த காதலி

அவளாகசென்று

எனக்கு நினைவு திரும்பும்வரை..

கலைத்து விடாதீர்கள்..

எங்கள் கனவுகளையும்....

காதலையும்.......

ரோஜாவிற்கும் முள் உண்டு என....

என் இதயத்தில்

சுகமான வலி வரும்போதுதான்

தெரிந்துகொண்டேன்..

ரோஜாவிற்கும்

முள் உண்டு என....

ஒருத்தியாக உள்ளத்தில்....

உறவுகளின்

ஒட்டு மொத்த பாசத்தையும்

ஒருத்தியாக வந்து

கொள்ளையடித்து சென்றால்

உள்ளத்தில்....

காதலி(யி)ன் நினைவுகள்....

பனி மூடிய மலைகள்..

கரையத்தொடங்கின......

இதயத்தில்

மறைத்துவைத்த

காதலி(யி)ன் நினைவுகள்

கண்ணீர்த்துளிகளாய்......

ஒரு தலை காதல்...

அவள் எங்கோ
இவன் இங்கே
கனவோடும்,
நினைவோடும்
வாழ்கிறான்!

Thursday, September 9, 2010

உன் நினைவுகள்

இல்லையென்றான பிறகும்
உன் நினைவுகள் மட்டும்
ஒரு தொடர் கதையாக
என்னை தழுவி வாழ வைத்து கொண்டிருக்கிறது


ஆசை

கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப் பட்டேன்.

ஆனால்,

இப்போது உன்னை கண் சிமிட்டும் நேரமாவது பார்க்க ஆசை படுகிறேன்!!!

ஏமாற்றம்

விழிகளை மூடினேன்
உறங்குவதற்காக் அல்ல
உன்னை காண்பதற்காக
அதிலும் எனக்கு
ஏமாற்றம் தான் தந்தாய்!!!

நேசித்தால் மட்டும் போதும்

இவ் உலகில் யாரையும் எல்லை
மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே:(:(:(

மௌனம்

பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்.
ஆனாலும் அவள் பக்கத்தில் வரும்பொழுது
முந்திக் கொள்கிறது மௌனம்!!!

வாழ்க்கை

கனவோடு வாழ்ந்தேன்,
நினைவோடு வாழ நினைக்கிறேன்.
வாழ்க்கை கொடுங்கள் இல்லை,
வாழ விடுங்கள்!!!

Tuesday, August 31, 2010

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்
உறவுகளை மறந்து
ஒருதியை மட்டும்
நினைத்து வாழும் புனிதமான
காதல்!!!

ஊர் உறங்கிய பொழுதில் கூட
உறங்காது விழிகள் ஆனால்
அவள் உறவை நினைத்து
ஏங்கிடும் இதயம்!!!!

மறக்காத காதல்

நம்ம விரும்புன பொண்ணு நமக்கே கிடைச்சி
அவ கூட வாழ்ந்தால் தான்
வாழ்கை என்று ஒன்னும் இல்ல,
சாகுற வரை அந்த பொண்ணு முகத்த கூட
பார்க்காமல் அவளை நினைச்சி
கொண்டே வாழ முடியும்,
நான் அப்படி தான் வாழ போறேன்.
தினமும் என் கனவுல வந்துருவா,
பகல் ல அவ போட்டோ பார்த்துகொண்டே
வாழ்ந்துருவேன்

Wednesday, August 25, 2010

நீயே சொல்

எனக்கும் எல்லா உறவுகளும் இருக்கிறார்கள் ...

என் தாய் தந்தை ....

சகோதரி...

அண்ணன் தம்பி....

நண்பர்கள்....

தோழிகள்....


ஆனால் உன்னை மட்டும் இந்த உறவுகளில் சேர்த்த மனம் வரவில்லை ...

நீயே சொல்லடி... உனக்கும் எனக்கும் இருக்கும்

இந்த இனிய உறவுக்கு பெயர் என்ன....?

Sunday, August 15, 2010

ஏமாற்றம்

ஏமாற்றகளை
சந்தித்த பின்
எதிர்பார்ப்பு
இல்லாமல்
வாழ
கற்று கொள்கிறேன்:(

பிரிவு

பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றன ...
??? ... கனவாக அல்ல ... ???
<<<... கண்ணீராக ... >>>

Tuesday, August 10, 2010

காதல் சின்னம்

தோல்வியின் சின்னம் "தாஜ்மஹால்".
வெற்ற்யின் சின்னம் இது வரை இல்லை.

ஏனென்றால்,

ஜெயித்தவன் காதலை மதிப்பதில்லை.
தோற்ற்வன் காதலை மறப்பதில்லை..

நினைவுகள்

தனிமையில் இருக்க முயற்சிக்கிறேன்.

முடியவில்லை..

என்றுமே என்னுடன் அவள் நினைவுகள் இருப்பதால்.

Friday, July 30, 2010

நினைவு

மறக்க வேண்டும் என்று
நினைக்க
நினைக்க,
என் நினைவெல்லாம் நீயே!!!

Thursday, July 29, 2010

நினைவு

கணங்களில் அதிகரித்து செல்லும் உன் நினைவுகளால்
கனக்கிறது என் இதயம்
அச்சபடுகிறேன் நான்,
கடத்த நினைக்கும் உன் நினைவுகள்
கரைத்துவிடுமோ என் இதயத்தை என்று!!!

நான்

வலிகள் மட்டுமே வாழ்க்கையாகி
போனது இங்கு எனக்கு மட்டும் ..
பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள் என
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் என்னுள் ..



இங்கு நான் சிரிப்பதும் சிரிக்க
வைப்பதும் வேஷங்கள் மட்டுமே...
அறியாதவயதில் நான் செய்த
சேட்டைகள் அனைத்தும் இன்று
விளைவுகளாய் என்னிடத்தில் ...


வருந்துவதை தவிர வேறு வழி
இல்லமால் வாழ செய்துவிட்டது சூழ்நிலை...
தினமொரு சிந்தனையில் சிக்கி
சிறுத்துகொண்டு போகிறது மனம்....
திசை அறிய முற்படும் போதெல்லாம்
திடீர் புயலாய் சிறு சிறு தடைகள் ..



அறியாத இத் தேசத்தில் சரியான
முடிவுகளை தேர்வு செய்வதில் இடியப்பமாய்
சிக்கல்..வழி துணைக்கும் வழி காட்டவும்
என் நிழல் தவிர யாருமில்லை இங்கு ....
என்னில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே
என்னை வழி நடத்துகிறது எப்போதும்....
அதுவும் விடைபெறும் சந்தர்பங்களில்
அனாதையாய் நான்...... !!

Tuesday, July 27, 2010

உண்மை ஒன்று சொல்லிடவா?

உன்னை நான்
எப்போ காதலித்தேன்
எதற்காய் காதலித்தேன்
எந்த நிமிடம் காதலித்தேன்
என்று
இன்றும் கூட
எனக்கு எதுவுமே தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

ஏன் காதலித்தாய்?
எதற்காய் காதலித்தாய்?
என்ற உன் வினாக்களுக்கு
எனக்கு விடையும் தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

நீ
என் மீது
கோபப்படும் நேரமெல்லாம்
நான் செத்துப் பிழைக்கிறேன்

அதனால்
ஒரு போதும்
என்மீது நீ கோபப்படாதே!

உன்னை நான் கேட்டால் - நீ
உன்னை எனக்காய்
தருவாயோ...?
இல்லையோ...?
அதுவும் தெரியாது.

ஆனாலும்
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

என்னை நீ மறந்து விடாதே
ஏனென்றால்
உன் நினைவில்தான்
நான் இன்னமும்
என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்.

இப்போதெல்லாம்
நான் கண்மூடி
கனவுக்காய்க் காத்துக் கிடக்கிறேன்.

காரணம்
கனவிலாவது
என் காதலைச் சொல்லி விட.

அந்தச் சந்தோசமான
நினைவுகளினால்தானோ என்னவோ
என் வசந்தம்
இன்னமும் சாகாமல் இருக்கின்றன.

ஓ!...
என் மனத்திரை விலக்கி
என் மனம் திறந்து
உனக்கு
உண்மை ஒன்று சொல்லிடவா?

ம்... ம்...
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

Monday, July 26, 2010

வாழ்க்கை

கனவுகள் ஆயிரம் இருந்தாலும்
நினைவுகள் ஒன்றை மட்டும் நேசிப்பதே !!!!
நிஜமான வாழ்க்கை..!


காதல்

நம் வாழ்வில்
நம் காதல் வாழ்வதும்

என் மரணத்தில்
என் காதல் வாழ்வதும்

உன் கையில்.....

Sunday, July 25, 2010

அழகு

உன் அழகுகளை பற்றி
நீ உன் வீட்டு
உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட...


என்னிடம் கேட்டால் சொல்லுவேன்
அதன் சுகமான இம்சைகளை
வண்டி வண்டியாய்...!!!

ஏன் இந்த வேதனை

ஒரு வேலை... நான்..

உன் காதலை புறக்கணித்து விட்டு

உன்னையே எனக்கு ஒரு வரன் பார்த்து

முடிவு செய்ய சொல்லி இருந்தால் ...

என்னடி செய்திருப்பாய்..?

எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை...?

என் உயிர் தோழி


எப்படியோ வாழ்ந்திருப்பேன் ....

உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால் ... ஆனால்

"நீ இப்படித்தான் வாழவேண்டும்" என்று என் வாழ்க்கையை தீர்மானித்தவள் நீ தான்...

அதற்கு உறுதுணையாக நின்றவளும் நீ தான்...

உன் ஆசை தீர்மானத்திற்கு இணங்க

என் வாழ்க்கையை நான் மாற்றிக்கொண்டேன் ....

இப்போது நல்ல நிலையிலும் இருக்கிறேன் உன் விருப்பப்படி...

ஆனால்.....

அதை ரசிக்கத்தான் நீ இப்போது என்னுடன் இல்லை....

இந்த பிரிவு நமக்கு(நட்புக்கு) தேவையா.....?

நீயே சொல் ... என் உயிர் தோழி ...

Wednesday, May 5, 2010

மரணம்

உதிரும் மலருக்கு ஒரு நாள்தான் மரணம்.

பேசாத அன்புக்கு தினம் தினம் மரணம்.

Monday, May 3, 2010

விக்கல்

நூறு முறை விக்கல் வந்த போதும் தண்ணீர் குடிக்க முடியாமல் தவிக்கிறேன்!!!

எங்கே நீ என்னை நினைப்பதை நிறுத்தி விடுவாயோ என்று!!!!

காதல்

உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும் ...
உள்ளத்தை புரிந்து கொள்ள ஒரு உயிர் போதும்..

Thursday, April 29, 2010

மறக்க நினைக்கிறேன்

மறக்க வேண்டும்
என்று
தான்
நினைப்பேன்
அவளை
பார்க்கும் வரை...
ஆனால்,
அதை
கூட
மறந்து
விடுகிறேன்,
அவளை
பார்க்கும்
போது!!!!

Monday, April 26, 2010

சூரியன்

காலை வானத்தில்
தான்
மஞ்சள்
சூரியனைப்
பார்த்தேன்.
எப்பொழுது
அது
தரை
இறங்கி
வந்தது!!!

Thursday, April 22, 2010

என்ன செய்தாய் என்னை..!!

நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி!!!

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி!!!

சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி!!!

நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்!!!

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன!!!

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்!!!

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!

Thursday, April 8, 2010

கனவு

பெண்ணே!
உனது கனவு
என்வென்று
எனக்கு தெரியும்.
ஆனால்,
எனது கனவு
என்வென்று
உனக்கு தெரியுமா???
அது நீ தான்!!!

கவிதை

பார்ப்பது கண்ணீன் குற்றம் அல்ல,
பார்க்க வைத்த பெண்ணின் குற்றம்!!!
கவிதை எழுதுவது விரல்களின் குற்றம் அல்ல,
என்னை எழுத வைத்த விழிகளின் குற்றம்!!!

நட்பு

ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல..

மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு..

நேசம்

அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது..

நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது

கவிதை

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.

ஆனால்,

நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...

சந்தோஷம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே!!!

நிம்மதியாக வாழ முயற்சி செய்.

உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்!!!

வாழ்கை

வாழ்கையை வெறுத்து வாழாதே,
ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்!!!!

Saturday, March 27, 2010

உன்னை தவிர!!!

நான்
உன்
மீது
கொண்ட
காதல்
உன்னை
சுற்றி
உள்ளவர்களுக்கெல்லாம்
தெரிந்து விட்டது.

உன்னை தவிர!!!!

என்னவளே

உன்னை
அழகானவள்
என்று
கூறியதற்கா!!!

என்னை
அழவைத்து
பார்க்கிறாய்!!!

காதல்

காதல்
கண்களை
மூடுகிறது!!!

இதயத்தை
திறக்கிறது !!!

கண்களோடு

எனக்கு
ஒரே
ஒரு
ஆசை!!!!

உன்
கண்களோடு
பேச
வேண்டும்!!!!

என்
உயிர்
பிரிவதற்குள்!!!!

Friday, March 19, 2010

நினைவுகள்

நீ என்னை மறந்தாலும்,
நீ என்னை பிரிந்தாலும்,
என்றாவது
ஒரு நாள்,
நீ என்னை
நினைக்கும் போது
கண்களில் இருப்பேன்
கண்ணீராக!!!

Wednesday, March 17, 2010

யோசனை

யோசித்த
பின்
நேசி,
நேசித்த
பின்
யோசிக்காதே!!!
அது
நேசித்த
இதயத்தை
காயப்படுத்திவிடும்!!!

நினைப்பு

மறக்க
நினைக்கிறன்
உன்னை
அல்ல,
உன்னிடம்
பேசாமல்
விட்ட அந்த
நிமிடங்களை!!!

Saturday, March 13, 2010

நடிப்பு

என்
இதயம்
துடிக்கிறதோ
இல்லையோ,
நன்றாக
நடிக்கிறது,
உன்னை
மறந்துவிட்டேன்
என்று!!!!

Tuesday, March 9, 2010

கவிதை

கவிதைகள் எழுதிய
அனுபவங்கள் இல்லை

ஆனால் இன்று.....

நான் எழுதுபவை
அனைத்தும் கவிதைகளாகின்றது

என்னவளால் !!!

சொல்லாத காதல்

நான் காதலிப்பது யாருக்கும் தெரிய கூடாது என்று நினைத்து இருந்தேன்,
கடைசியில் அது அவளுக்கே தெரியாமல் போய்விட்டது....

Monday, March 1, 2010

நினைவு

சத்தியமாய்
சொல்கிறேன்!

என்னிடம்
உன்
நினைவுகள்
இல்லை!

உன்
நினைவுகளிடம்தான்!
நான்
இருக்கிறேன்!!

மௌனம்

ஒரு மனிதனைத் தாக்கும்
மிகப் பெரிய ஆயுதம்,
அவனுக்கு பிடித்த
ஒருவரின் மௌனம் தான்.....

Tuesday, February 16, 2010

பெண்ணே

கவிதை எழுத தெரியாதே !
பெண்ணே உன்னை
பார்க்கும் வரையிலே !
நாள்தோறும் உன் முகம்
தேடி வந்தேன் கல்லூரிக்கு
என் முகம்
மறக்கும் வரை !!
இதுதான் காதலோ !!
உன்னில்
என்னைத் தொலைத்தேனே ...

மனம்

நீ தினமும் என்ன உடை அணிகிறாய் !
எங்கெங்கெல்லாம் செல்கிறாய் !
யார் யாரெல்லாம் உன் நண்பர்கள் !
யார் யாரெல்லாம் உன் எதிரிகள் !
எந்தெந்த பூக்கள் பிடிக்கும் !
இன்னும் என்னவெல்லாம் உனக்கு பிடிக்கும் என...
உன்னைப் பற்றிய
குறிப்புகளால் நிறைகிறது
என்னுடைய மனக்குறிப்பு!!!

நட்பு

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..




நட்புடன்,,,,

சிந்தனை

கண்டும் காணாமல் போகும்,
உன் பின்னால் போகும்
எல்லையில்லா என்
சிந்தனை...

மேகம்

ஏன் அழுகிறாய் ?
நீ தூது விட்ட
மேகங்கள்
பாதி வழியிலே
மழையாய்
கரையந்தற்கா ????

Sunday, February 14, 2010

நட்பு

சில வேளைகளில்....
உன் வாழ்க்கையில் ஒருவர் இருக்கலாம் -அல்லது
உன் இதயத்தில் ஒருவர் இருக்கலாம் -அல்லது
உன் கனவுகளில் ஒருவர் இருக்கலாம் -நானும்
உன்னுடைய ஒருவன் தான்!
உனக்கென்று எவரும் இல்லாத போது


நட்புடன் மதுரையில் இருந்து ஸ்ரீராம்

என்னவளே!

காதலால் நான் என்னை மறந்தேன்!
மனிதனுக்கும் மனம் ஒன்று இருப்பதை உணர்தேன்!
அதிலும் காதல் வரும் என்று அறிந்தேன்!-அதன் பின்
முகத்தில் தோன்றும் இயல்பான சிரிப்பை துறந்தேன்!-இறுதியில்
காதலுக்காக அவளிடம் என்னை இழந்தேன்...!
(இன்று வாழ்கிறேன் நடை பிணமாய்)

காதலிக்காக இதயத்தை கொடுக்கும் காதல் கதை

உயிரே

காதலிப்பதை விட
காதலிகப் படுவது
பாக்கியம்...
அந்த
பாக்கியம்
எனக்கு மட்டும்
கிடைக்கவே கிடைக்காத
உயிரே...

Saturday, February 13, 2010

Friday, February 12, 2010

கவிதை

பார்த்தேன் ரசித்தேன்

சொர்க்கம்

நினைவு

என் இதய நதியின்
ஓடமாய்
உன் நினைவுகள்
என்றும்
ஓடிக்கொண்டே இருக்கும்!!!!

விஷம்

காதல்
வீஷமென்று சொன்னார்கள்
நான் அவர்களை பைத்தியகரர்கள்
என்றேன்....
காதல்
அமிர்தமென்றார்கள்
ருசித்து பார்த்தேன்....
தயவுசெய்து என்னிடம்
காதலென்றால் என்வென்று
கேட்காதீர்கள்
ஏனெனில்,
உணர்வுகளே இல்லாத உடலுக்குள்
நான்...

IDH@Y@

விழுந்தேன்

எதிர்பார்ப்பு

orkut

orkut-ல்
என் கவிதைகளை
படிக்கும் அனைவரும் கேட்கிறார்கள்
லவ் பெயிலியரா?என்று
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்?
என் கவிதைகளுக்கு காரணம்
காதல் இல்லை நட்பு என்று....

தோழி



கவிதை

எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைத் தான் என்று ...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகள் அல்ல
நான் தான் என்று!!!!

மழை