Friday, November 26, 2010

தவிக்கிறேன்....

படுக்கும்போதும்

உறங்கமறுத்து

உன்னையே நினைக்கிறேன்!-அந்த

காதலே இல்லையென

மறுத்தபோதும்

உன்னை மறக்காமல்

நான்

தவிக்கிறேன்!

உன் பார்வை பட்ட நாள்முதல்.....

உடலளவில் பாதிப்புகள் இல்லை..

மனதளவில் தான்..

என் மேல்

உன் பார்வை பட்ட நாள்முதல்.....

உண்மையான நட்பு!

விட்டு கொடுப்பது மட்டும்
நட்பல்ல!
கடைசிவரை விடாமல்
இருப்பதுதான்-உண்மையான நட்பு!

நட்பு

ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாத நட்பும்.... உரிமையை எடுத்து கொள்ளாத நட்பும் உண்மையான நட்பாக இருக்க முடியாது....!

காதல்

கவிதைகளில்
மட்டுமே
எனக்கு
காதல்
வசப்படுகிறது.....!

இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்...

"நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப்பாய்
என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
கேட்ப்பாய் என்று தெரியாது, ஏதோ
கோபத்தில் என்னை மறந்துவிடு என்று
சொன்னால், இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!! "

Sunday, November 21, 2010

இப்போதெல்லாம்.....

நான்
கவிதை எழுதும்
பொழுதெல்லாம்
உன்னை
நினைப்பதில்லை....

உன்னை
நினைக்கும்
பொழுது மட்டுமே
கவிதை எழுதுகிறேன்.....

இப்போதெல்லாம்
கவிதை மட்டுமே
எழுதிக் கொண்டிருக்கிறேன்.....

என் காதல்....!

நான் உன்னை
ஆயிரம் முறை
பார்த்திருந்தாலும்
நீ என்னைப் பார்த்த
அந்த நொடியில் தான்
விதையாய் விழுந்தது
என் காதல்....!

நான் உன் பெயரை
கோடி முறை
ஜெபித்திருந்தாலும்
நீ என் பேர் சொன்ன
அந்த நொடியில் தான்
முதல் பூ பூத்தது
என் காதல்....!

நான் உன்னிடம்
கனவிலும் நினைவிலும்
பேசியிருந்தாலும்
நீ என்னிடம் பேசிய
அந்த நொடியில் தான்
கனிந்து கசிந்தது
என் காதல்.....!

நான் உன்னையே
உயிராய், வாழ்வாய்
எண்ணியிருந்தாலும்
நீ உன்னவளை காட்டிய
அந்த நொடியில் தான்
'நம் காதல்' ஆகாமலே
சருகாகிப் போனது
என் காதல்.....!

என் மனம் தற்கொலை செய்துகொண்டது.

அளவில்லா ப்ரியங்களுடன்
பேச முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.

இதயத்தில் ....

அனுமதியில்லாமல்

வந்திருந்தாலும்

அனுப்பிவைக்க விருப்பமில்லை...

இதயத்தில் அவள்...

காதல்

கா - காலமெல்லாம்

த - தவித்திருப்பான்

ல் - இல்லாத ஒன்றிற்காக..!

உன் நினைவுகள் வாழ்வதால்....

தனியாக இருந்தபோதும்

தனிமையென நினைத்ததில்லை....

இதயத்தில் எப்போதும்

உன் நினைவுகள் வாழ்வதால்....

இதயத்தினுள் வலியோ ஆயிரமாயிரம்..

நான் இதுவரை

எழுதிய கவிதைகள்

ஆயிரமாக இருக்கலாம்..

என் இதயத்தினுள் இன்னமும்

உன் நினைவுகள்

கொடுக்கும் வலியோ ஆயிரமாயிரம்..

Wednesday, November 17, 2010

என் இதயத்தில்

தூண்டிலில்

சிக்கிய மீனாய்

சிக்கி தவிக்கிறேன்....

என் இதயத்தில்

அவள் பார்வை பட்ட நாள்முதல்.....

ஒரே ஒரு பார்வையில்...

மாயம் செய்யவில்லை...

மயங்கிவிட்டேன்....

அவள் பார்த்த

ஒரேஒரு பார்வையில்...

ஒரு தலை காதல்

கண்கள் உன்னை
கண்டதும்
கவலைகள் பறந்தன
கண்ணீர் மறைந்தன
புன்னகை பூத்தது
முழு நிலவுடன்-என்
வாழ்க்கை பயணம்
தொடந்தது- ஒரு
தலை காதலுடன்....

கனவு

நீ ஏன் கை கோர்க்க
நான் உன் விரல் பிடித்து
நடந்தேன் கடற்கரை மணலில் !
அலை வந்து அழித்தது
நம் பாத சுவடுகளை
விழித்து எழுந்தேன் !
ஏன் கனவும் கலைந்தது !
என்றும் ஏன் கனவில் நீ
நிஜத்தில் ????????????

பிரிவு

பிரிவு எனக்கு நெருங்கிய நண்பன்... பழகியவர் எல்லாம் என்னை விட்டு பிரிந்து செல்கின்றனர் ஆனால் பிரிவு மட்டும் என்னைவிட்டு பிரிந்து செல்வதில்லை...!

ஒரு தலை காதல்

என்னை வெறுத்த அவளையே மறக்க முடியாத போது நான் விரும்பிய அவளை என்னால் எப்படி மறக்க முடியும்?

கனவுகளுக்கு எச்சரிக்கை...

கனவுகளுக்கு எச்சரிக்கை...

கனவில் வந்த காதலி

அவளாகசென்று

எனக்கு நினைவு திரும்பும்வரை..

கலைத்து விடாதீர்கள்..

எங்கள் கனவுகளையும்....

காதலையும்.......

ரோஜாவிற்கும் முள் உண்டு என....

என் இதயத்தில்

சுகமான வலி வரும்போதுதான்

தெரிந்துகொண்டேன்..

ரோஜாவிற்கும்

முள் உண்டு என....

ஒருத்தியாக உள்ளத்தில்....

உறவுகளின்

ஒட்டு மொத்த பாசத்தையும்

ஒருத்தியாக வந்து

கொள்ளையடித்து சென்றால்

உள்ளத்தில்....

காதலி(யி)ன் நினைவுகள்....

பனி மூடிய மலைகள்..

கரையத்தொடங்கின......

இதயத்தில்

மறைத்துவைத்த

காதலி(யி)ன் நினைவுகள்

கண்ணீர்த்துளிகளாய்......

ஒரு தலை காதல்...

அவள் எங்கோ
இவன் இங்கே
கனவோடும்,
நினைவோடும்
வாழ்கிறான்!